Latest News

September 09, 2015

தொடரும் பன்னாட்டு நீதி கோரி ஐநா நோக்கி செல்லும் மனித நேய ஈருருளிப் பயணம்!
by Unknown - 0

தமிழின அழிப்புக்கு பன்னாட்டு நீதி கோரி ஐநா நோக்கி செல்லும் மனித நேய ஈருருளிப் பயணம் யேர்மனியில் Mettlach நகரத்தை வந்தடைந்தது .இன்றைய ஈருருளிப் பயணத்தில் Frankfurt நகர பணியாளர்களும் இணைந்து கொண்டது குறிப்பிடத்தக்கது .ஈருருளிப் பயணம் செல்லும் வழிகளில் யேர்மனிய மக்கள் ஆர்வத்துடன் இப் பயணத்தின் நோக்கத்தை அறிந்துகொண்டனர் .

ஈருருளிப் பயணம் நிறைவடைந்ததை தொடர்ந்து மாலை 3 மணியில் இருந்து Merzig தொடரூந்து நிலையத்துக்கு முன்னராக தமிழின அழிப்பை எடுத்துரைக்கும் துண்டுப்பிரசுரம் யேர்மன் மொழியில் விநியோகிக்கப்பட்டது.

நாளைய தினம் Rathaus Mettlach நகரத்தில் இருந்து Saarlouis நகரத்தை நோக்கி ஈருருளிப் பயணம் செல்ல இருக்கிறது .இப் பயணத்தில் Landau நகர பணியாளர்களும் இணைய இருகின்றனர் .

தமிழின அழிப்புக்கு நீதி கோரும் ஈருருளிப் பயணம் எதிர்வரும் 21.09 அன்று ஜெனீவா நகரில் நடைபெறும் மாபெரும் பேரணியில் இணைய இருக்கின்றது.




« PREV
NEXT »

No comments