Latest News

September 21, 2015

பங்களாதேஷின் களத்தடுப்பை காட்டிலும் இலங்கை அணியின் களத்தடுப்பு மோசமானது – பயிற்றுவிப்பாளர்
by Unknown - 0

இலங்கை அணிக்கு இடைக்கால களத்தடுப்பு பயிற்றுவிப்பாளராக இணைக்கப்பட்டுள்ள ஜெரோம் ஜயரத்ன ஆசியாவியேயே மிக மோசமான களத்தடுப்பாக இலங்கை அணியின் களத்தடுப்பை வர்ணித்துள்ளார்.

மேலும் பாகிஸ்தான் அணியினைக் காட்டிலும் இலங்கை அணியின் களத்தடுப்பு மோசமாகக் காணப்படுவதாக தெரிவித்துள்ளார்.

அண்மையில் இலங்கைக்கு வருகை தந்த இந்திய அணி தமது திறமையை சிறப்பாக வெளிப்படுத்தியதாகவும் பங்களாதேஷ் அணியானது இலங்கையைக் காட்டிலும் சிறப்பான முறையில் களத்தடுப்பில் ஈடுபடுவதாக ஜெரோம் ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

இந்த வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் வீரர்களின் அதிகரித்த எடையே என இவர் மேலும் தெரிவித்துள்ளார்.
« PREV
NEXT »

No comments