யாழ்ப்பாணம் புங்கங்குளப் பகுதியில் சென்று கொண்டிருந்த ரயிலுக்கு முன் பாய்ந்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இன்று நண்பகல் நடைபெற்ற இச் சம்பவத்தில் புத்தூர் பகுதியினைச் சேர்ந்த ரவீந்திரன் ரஜிந்தன் (வயது 19) என்பவரே உயிரிளந்துள்ளார்.
குறித்த நபர் யாழ்ப்பாணத்தில் உள்ள வாகன திருத்தகம் ஒன்றில் பணிபுரிந்து வந்தாகவும், காதல் தோல்வியாலேயே அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேற்படிச் சம்பவத்தில் உயிரிளந்தவருடைய சடலம் தற்போது பிரேத பரிசோதனைக்காய யாழ்.போதனா வைத்திய சாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
No comments
Post a Comment