Latest News

September 22, 2015

இன்றே தீர்வு வேண்டும் : வடக்கு முதல்வருடன் முரண்பட்ட வேலையில்லா பட்டதாரிகள்!
by Unknown - 0

வட மாகாண சபைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள வேலையற்ற பட்டதாரிகள், வடக்கு முதல்வர் மற்றும் மாகாண சபையினருடன் முரண்பட்டுள்ளனர்.

வடமாகாண சபை அமர்வு இன்றைய தினம் நடைபெற்று வரும் நிலையில், வடமாகாண சபையை முற்றுகையிட்டு, வடமாகாணத்தின் வேலையற்ற பட்டதாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து இன்றைய அமர்வில் இது குறித்து பேசப்பட்டதோடு,  இன்னமும் தமக்கு ஒரு மாதகால அவகாசம் தருமாறும் அதற்குள் தீர்வைப் பெற்றுத்தருவதாகவும் முதலமைச்சர் மற்றும் வடக்குமாகாணசபை உறுப்பினர்கள் தெரிவித்தனர்.ஆனால் வேலையற்ற பட்டதாரிகள் தமக்கு இன்றே தீர்வு வேண்டும் என்று வலியுறுத்தியதைத் தொடர்ந்து வடக்கு மாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானத்தால் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களிடமிருந்து 7 பேர் கொண்ட குழுவொன்றையும்,அதேபோல உங்களிடமிருந்தும் 7பேர் கொண்ட குழுவை அமைத்து இது தொடர்பில் இன்றே ஆராய்வோம் எனவும் உறுதியளித்தார்.

மேலும் வடமாகாண சபையிலிருந்து 7பேர் கொண்ட குழுவும், வேலையற்ற பட்டதாரிகளிடமிருந்து 7பேர் கொண்ட குழுவும் இன்றைய தினம் மாலை 5மணிக்கு வடக்கு மாகாண சபையில் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டு குறித்த பிரச்சினை தொடர்பில் ஆராயவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
« PREV
NEXT »

No comments