Latest News

September 22, 2015

நான் ஊமை; இனி அதிகம் பேசமுடியாது -வடக்கு முதல்வர்
by Unknown - 0

இனி அதிகம் பேசமுடியாது. நான் ஊமையாகவே வந்துள்ளேன். வாய் திறந்தால் பிரச்சினை என்று வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

நேற்று யாழ்.பண்ணைக் கடற்கரையில் இடம்பெற்ற தேசிய கடலோரச் சுத்திகரிப்புத் தினநிகழ்வில் கலந்துகொண்ட முதலமைச்சரிடம் அங்கு அவர் ஆற்றிய உரை தொடர்பான மேலதிக விபரங்களைக் கோரிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நேற்றைய தினம் முதலமைச்சர் தனது உரையில், இந்திய-இலங்கை மீனவர்களின் பிரச்சினைக்கு இரு நாட்டு அரசுகளும் பேசித் தீர்வு காண வேண்டும் எனக் கூறியிருந்தார். இது தொடர்பில் அவரிடம் விரிவான தகவலைப்பெற முயன்றபோதே அவர் இவ்வாறு கூறினார்.மேற்கொண்டு அவர் எதனையும் தெரிவிக்கவில்லை.
« PREV
NEXT »

No comments