Latest News

September 01, 2015

மஹிந்தவுக்கு முதல் வரிசையில் ஆசனம்
by Unknown - 0

பொதுத்தேர்தலில் குருநாகலை மாவட்டத்தில் போட்டியிட்டு அதிகூடிய விருப்பு வாக்குகளால் பாராளுமன்றத்துக்குத் தெரிவான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ இன்று காலை 9.25 மணியளவில் அவைக்கு சமுகமளித்தார்.

அத்துடன், முதல் வரிசையின் இரண்டாவது ஆசனத்தில், நிமல் சிறிபால டீ.சில்வா மற்றும் சரத் அமுனுகமவுக்கு பக்கத்தில் அவர் அமர்ந்துகொண்டார்.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான வருகை பதிவேட்டிலும் அவர் கையொப்பமிட்டார்.
« PREV
NEXT »

No comments