மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜின்னா நகரில் இன்று காலை இந்தத் துப்பாக்கிச்சூட்டுச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தின் போது அப்பகுதியில் இருந்த தனது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த சுல்தான் முஹம்மது இக்ராம் என்பவர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கான காரணம் மற்றும் கொலையாளிகள் தொடர்பான தகவல்கள் இதுவரை கிடைக்காத நிலையில், பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
No comments
Post a Comment