இலண்டனில் இருந்து ஜெனிவா நோக்கி சர்வதேச நீதிகோரி திங்கட்கிழமை பிரித்தானியப் பிரதமரின் வாசத்தலம் முன்பாக தொடங்கப்பட்ட மிதிவண்டிப் பரப்புரைப் பயணதின் இரண்டாம் நாள் பயணம் சற்றுமுன் பிரித்தானியாவின் ஹார்விஷ் என்னும் இடத்தின் ஊடக தொடங்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் சுப்ரமணியம் பரமேஸ்வரன் அவர்களும் பிரித்தானியா நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகளான நீதிராஜா, திருக்குமாரன் ஆகியோரும் இணைந்து இந்த மிதிவண்டிப் பரப்புரைப் பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.
இதேவேளை பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் சுகந்தன் அவர்களும் இந்த பயணத்தில் தன்னையும் இன்றைய தினம் இணைத்துக்கொண்டுள்ளார் .
பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் சேர்ந்து இந்த பன்னாட்டு நீதி விசாரணையை வலியுறுத்திய மிதிவண்டிப்பரப்புரைப் பயணத்தை ஆரம்பித்திருப்பது குறிப்பிடத்தக்க நிகழ்வாகும்.
பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் சேர்ந்து இந்த பன்னாட்டு நீதி விசாரணையை வலியுறுத்திய மிதிவண்டிப்பரப்புரைப் பயணத்தை ஆரம்பித்திருப்பது குறிப்பிடத்தக்க நிகழ்வாகும்.
No comments
Post a Comment