கொண்டயாவின் அதிர்ச்சி வாக்கு மூலம்
கொட்டதெனியாவ பகுதியில் 5வயது சிறுமியான சேயா வீட்டின் கதவைத் திறந்து உள்நுழைந்து தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை தோளில் கிடத்திக் கொண்டு சென்றேன் என்று சேயா கொலையின் பிரதான சந்தேக நபரான கொண்டயா என்றழைக்கப்படும் துனேஸ் பியசாந்த வயது(32) பொலிஸாருக்கு அளித்துள்ள வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தனது வாக்கு மூலத்தில் தெரிவித்தவை,
சின்னக் குழந்தைகள் என்றால் எனக்கு அளாதிப்பிரியம் அதுமட்டுமல்ல.பெண்கள் குளிப்பதை மறைந்திருந்து பார்க்கும் பழக்கத்தை வழமையாக கொண்டுள்ளவன். நான் பலமுறை சேயாவை கண்டு அவள் மீது ஆசை கொண்டேன்.ஒரு நாள் அவளை இரவு வீட்டில் இருந்து தூக்கிக் கொண்டு சென்று வன்புணர்வுக்குட்படுத்தி படுகொலை செய்துவிட்டு அவளுடைய சடலத்தை ஓடைக்கருகில் மறைத்து வைத்து விட்டு எனது சகோதரி வீட்டிற்குச் சென்றுவிட்டேன்.
எனினும் எனது சகோதரி நான் அணிந்திருந்த ஆடைகளில் இரத்தக் கறைகளை படிந்திருப்பதை கண்டு விசாரித்தார். எனினும் இது தொடர்பில் எதனையும் வெளியிட வேண்டாம் என்றும் நான் எனது சகோதரியை அச்சுறுத்தினேன்.என்றும் அவர் வாக்கு மூலத்தில் தெரிவித்திருத்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் சந்தேக நபரான கொண்டயாவை மயானத்துக்கு அருகிலுள்ள வீடொன்றின் பூந்தோட்டத்துக்குள் மறைந்திருந்த போதே இரகசியப் பொலிஸாரினால் கடந்த 23ஆம் திகதி கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments
Post a Comment