தமிழரசு கட்சியின் உட்கட்சி மோதல் உக்கிரமடைந்துள்ளதன் வெளிப்பாடகா இலங்கை தமிழரசுக்கட்சியின் துணைத்தலைவராக பேராசிரியர் சிற்றம்பலம் அப்பதவியிலிருந்து ராஜினாமா செய்யவுள்ளதுடன் அரசியல் நடவடிக்கைகளிலிருந்தும் விலகப்போவதாக அறிவித்துள்ளார்.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் கூட்டமைப்பின் தேசியப்பட்டியலில் அவரது பெயர் முன்மொழியப்பட்டிருந்ததுடன் அவருக்கு கட்சி தலைமையினால் நம்பிக்கையும் வழங்கப்பட்டிருந்தது.
எனினும் எதிர்பார்த்தது போன்றே இறுதி நேரத்தில் அவர் கைவிடப்பட்டு சாந்தி மற்றும் துரைரட்ணசிங்கம் ஆகியோருக்கு அவை வழங்கப்பட்டிடிருந்தன.
முன்னரும் இதே போன்றே ஏமாற்றப்பட்டிருந்த அவர் இம்முறை தனக்கு நிச்சயம் சந்தர்ப்பம் வழங்கப்படுமென்ற நம்பிக்கையில் முரண்பாடுகளை மறந்து ஏனைய வேட்பாளர்களது பிரச்சாரக்கூட்டங்கிளில் பங்கெடுத்திருந்தார்.
No comments
Post a Comment