Latest News

August 08, 2015

அதிகாரப் பகிர்வையும் மறுத்தால் விருப்பறியும் சர்வஜன வாக்கெடுப்பு -வட,கிழக்கில் ஐ.நா. நடத்த வேண்டும்: சிவாஜிலிங்கம்-
by admin - 0

அதிகாரப் பகிர்வையும் மறுத்தால் விருப்பறியும் சர்வஜன வாக்கெடுப்பு -வட,கிழக்கில் ஐ.நா. நடத்த வேண்டும்: சிவாஜிலிங்கம்-
தமிழ் மக்களுக்கு சமஸ்டி அடிப்படையிலான சுயநிர்ணய உரிமையை இலங்கை அரசாங்கம் வழங்க மறுத்தால் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சர்வஜன வாக்கெடுப்பை நடத்தி தமிழ் மக்களின் விருப்பத்தை நடைமுறைப்படுத்த ஐக்கிய நாடுகள் சபை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அத்துடன் இறுதிப் போரில் இராணுவத்தினரிடம் சரணடைந்த 600 போராளிகள் மற்றும் காணாமற்போன 18 ஆயிரம் தமிர்கள் தொடர்பில் இலங்கை அரசு தனது நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும்.

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வட மாகாண சபை உறுப்பினரும் நாடாளுமன்றத் தேர்தல் குருநகல் மாவட்ட சுயேட்சை முதன்மை வேட்பாளருமான எம்.கே.சிவாஐpலிங்கம் வலியுறுத்தியுள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று ஊடகவியலாளகளைச் சந்தித்துப் பேசும்போதே அவர் இந்தக் கருத்துக்களை முன்வைத்தார்.

தமிழ் மக்களின் ஒரு நாட்டுக்குள் அதிகாரங்களைப் பகிந்து வாழும் சமஸ்டிக் கோரிக்கையை முன்வைத்து தென்னிலங்கையில் இனவாதம் பரப்பப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இனவாதக் கருத்துக்களை முன்வைத்தே தனது பிரசாரங்களை மேற்கொள்கிறார்.

குருநாகலில் நான் போட்டியிடுவது மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான தமிழ் மக்களின் எதிர்ப்பைப் பதிவு செய்வதற்காகவே எனவும் சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

இந்தத் தேர்தலின் ஊடாக நான் நான் பத்துக் கோரிக்கைகளை முன்வைத்திருக்கின்றேன் எனவும் கூறிய சிவாஜிலிங்கம் அவற்றைப் பட்டியலிட்டார். அந்தக் கோரிக்கைகள் வருமாறு,

தமிழ் அரசு உட்பட ஐந்து அரசுகள் கொண்ட இலங்கை ஒன்றியம் கூட்டு இணைப்பாட்சியின் அடிப்படையிலேயே இனப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வைக் காணமுடியும், திருகோணமலை ,கண்டி அநுராதபுரம் காலி ஸ்ரீnஐயவர்தனபுர ஆகியவற்றை அரசுகளின் தலைநகரங்களாகத் தேர்வு செய்ய முடியும்.

பாதுகாப்பு, வெளிவிவகாரம் மட்டுமே மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும். மத்திய அரசு ஐனாதிபதியின் கட்டுப்பாட்டில் கொழும்பில் இயங்கும்.

இறுதிப் போரில் இலங்கை இராணுவத்திடம் சரணடைந்த சுமார் 6000 போராளிகள் உட்படகாணமல் போன 18,000 தமிழர்களின் நிலைபற்றி இலங்கை அரசு தனது நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும்.

அனைத்துதமிழ் அரசியல் கைதிகளையும் நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும்.

பயங்கரவாதத்தடைச் சட்டத்தையும் உடனடியாக நீக்கவேண்டும்.

தமிழர் தாயகத்தில் அரசு உதவியுடனான சிங்களக் குடியேற்றங்களை உடனடியாக நிறுத்தி, இராணுவ ஆட்சியை மீளப்பெறு, உயர்பாதுகாப்பு வலயங்களை முற்றாக நீக்க வேண்டும்.

இலங்கை அரச படைகளினால் கொல்லப்பட்ட ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட தமிழ் மக்கள் மீதான இனப் படுகொலைக்காகவும், போர்க் குற்றங்களுக்காகவும், மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களுக்காகவும் சுதந்திர சர்வதேச நீதிவிசாரணை ஊடாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அல்லது சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம்  ஒன்றின் ஊடாக பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதிகிடைக்கவும், குற்றவாளிகள் தண்டிக்கப்படவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

எதிர்காலத்தில் தமிழ்மக்களின் பாதுகாப்புக் கருதி சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றவாளிகள் நிறுத்தப்படக் கூடியவாறு இலங்கை அரசு ரோம் உடன்படிக்கையில் கையெழுத்திட வேண்டும்.

இனப்பிரச்சினைக்கான தீர்வுப் பேச்சுவார்த்தைகளில் ஐக்கிய நாடுகள் சபையின் தொழில நுட்ப உதவியுடன் இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகள் மத்தியஸ்தம் வகிக்க வேண்டும்.

இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களின் 70 ஆயிரம்  ஏக்கர் காணிகள் இலங்கை அரச படைகளினால் சுவீகாரம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை விடுவிக்கப்பட்டுள்ள சுமார் 3000 ஏக்கர் காணிகளைத் தவிர மிகுதி நிலங்கள்  விடுவிக்கப்பட வேண்டும்.

இடம்பெயர்ந்து மக்கள் தமது சொந்த இடங்களில் மீளக் குடியேற்றப்பட்ட வேண்டும்.

இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்களுக்கு தனியான மொழி, கலை, கலாச்சாரம், தாயகம், பொதுப் பொருளாதாரம் இருப்பதனால் அவர்கள் ஒரு தேசிய இனமாக விளங்குகின்றனர். தேசிய இன மக்களின் சுயநிர்ணய உரிமை என்பது ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கப்பட்டது. இதனைக் கருத்தில் கொண்டு தமிழர்கள், முஸ்லிம்கள், சிங்களவர்கள் அனைவரும் சம உரிமையுடன் வாழ வழிவகை செய்யப்படும்.

போரில் கொல்லப்பட்டவர்களுக்கும், உடல் ஊனமுற்றவர்களுக்கும், சொத்து அழிவுகளுக்கும் போதியளவு நட்டஈடு வழங்கப்படுவதை சர்வதேசசமூகம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

போரினால் பாதிக்கப்பட்;டவர்களுக்கான மறுவாழ்வுத் திட்டங்கள் ஐக்கியநாடுகள் சபையின் மேற்பார்வையில் இடம் பெறவேண்டும்.
« PREV
NEXT »

No comments