Latest News

August 31, 2015

தமிழ் மக்கள் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டு வருகின்றனர் – சாந்தி ஶ்ரீஸ்கந்தராஜா
by Unknown - 0

தமிழ் மக்கள் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டு வருவதாக தமிழரசுக் கட்சியில் தேசிய பட்டியலுக்கு பெயரிடப்பட்டுள்ள சாந்தி ஶ்ரீஸ்கந்தராஜா தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவில் நேற்று (30) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இலங்கை தமிழரசு கட்சியில் தேசிய பட்டியலுக்கு பெயரிடப்பட்டுள்ள சாந்தி ஶ்ரீஸ்கந்தராஜாவை வரவேற்கும் நிகழ்வொன்று நேற்று இடம்பெற்றது.

முல்லைத்தீவு – வற்றாப்பளை பகுதியில் இடம்பெற்ற இந்த நிகழ்வை, வற்றாப்பளை மற்றும் கேப்பாப்பிளவு மக்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
« PREV
NEXT »

No comments