பண்டாரநாயக்க பரம்பரையில் வந்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் போன்று செயற்படுவதாக முன்னாள் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் குற்றம் சாட்டியுள்ளார்.
தம்புள்ளயில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் போஷகராகவுள்ள இவரின் சில கருத்துக்கள் கட்சியின் அரசியல் நடவடிக்கைகளுக்குப் பாதிப்பாகவுள்ளது.
இவருடைய நடவடிக்கைகளைப் பார்க்கும் போது இவர் கட்சியின் போஷகராகவல்ல, ஐ.தே.க.யின் ஊடகப் பேச்சாளர் போன்றே செயற்படுகின்றார் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
No comments
Post a Comment