Latest News

August 05, 2015

சந்திரிகா மேடையேறுகிறார்!
by Unknown - 0

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்க, மாதுலுவாவே சோபித தேரரின் சாதாரண சமூகமொன்றுக்கான மக்கள் அமைப்பின் மேடைகளில் ஏறி தேர்தல் பிரசாரம் செய்வதற்கு தீர்மானித்துள்ளார்.

இவ்வமைப்பு அகலவத்தை, மீகஹதென்னயில் நாளை மறுதினம் (07) ஏற்பாடு செய்திருக்கும் பிரசாரக் கூட்டத்தில் சந்திரிகா உரையாற்றுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அத்துடன், குருநாகலையில் எதிர்வரும் 08ஆம் திகதியும், அத்தனகல்லையில் எதிர்வரும் 09ஆம் திகதியும் நடைபெறவுள்ள சோபித தேரரின் கூட்டங்களிலும் சந்திரிகா உரையாற்றவுள்ளார்.
« PREV
NEXT »

No comments