முல்லைத்தீவு வித்தியானந்தா கல்லூரியின் பௌதீக தேவைகளை பூர்த்தி செய்யும் பொருட்டு ஞானம் அறக்கட்டளையால் மூன்று கோடி ரூபா பெறுமதியில் ஆண் பெண்களுக்கான தங்குமிட விடுதிகள் அமைக்கப்பட்டு நேற்று பாடசாலை சமுகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளன.
வைபவ ரீதியாக ஞானம் அறக்கட்டளையின் நிறுவுனர் திருமதி.அல்லிராஜா பாஸ்கரன் மற்றும் லைக்கா மொபைல் நிறைவேற்றுப்பணிப்பாளர் சுபாஸ்கரன் அல்லிராஜா ஆகியோரால் இது கையளிக்கப்பட்டுள்ளது.
No comments
Post a Comment