Latest News

August 17, 2015

வாக்களிப்பு விகிதங்கள் 50 வீதத்தை கடந்த வவுனியா
by admin - 0

08வது பாராளுமன்ற பொதுத் தேர்தலில் யாழ் மாவட்டத்தில் 05 இலட்சத்து 29 ஆயிரத்து 239 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். அவற்றின் அடிப்படையில் இன்று காலை 07.00 மணியில் இருந்து வாக்களிப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மக்கள் வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருவதையும் சுமுகமான முறையில் வாக்களிப்புகள் இடம்பெறுவதையும் அவதானிக்க முடிந்துள்ளது.

காலை 7மணிமுதல் 1மணிவரை  இடம்பெற்ற வாக்களிப்பு விபரங்கள :-

யாழ்ப்பாணம் 44 %

வவுனியா - 57%

காலி - 50%

கேகாலை - 60%

மாத்தறை - 58%

அத்துடன் நண்பகல் 12.00 மணிவரை பதுளையில் 40% வாக்குகளும், குருநாகலில் 50% வாக்குகளும் பதிவாகியுள்ளதாக செய்திகள்  தெரிவிக்கின்றன.
« PREV
NEXT »

No comments