எமது சமூகத்தின் அடையாளமாகவிருந்த யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தை தமிழ் தேசியக்கூட்டமைப்பு தனது சுயநலனிற்காக நாசமாக்கியிருப்பதாக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தற்போதைய வேட்பாளரும் உதயன் நாளிதழ் உரிமையாளருமான சரவணபவனின் ஏற்பாட்டிலேயே அனைத்தும் நடந்துள்ளது.
கடித தலைப்புக்கள் அங்கேயே அச்சிடப்பட்டுள்ளது.இறப்பர் முத்திரைகள் கூட அங்கிருந்தே தயாரிக்கப்பட்டு எடுத்து வரப்பட்டுள்ளதாகவும் அப்பிரதிநிதிகள் அம்பலப்படுத்தியுள்ளனர்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியினில் பிரச்சார கூட்டமொன்று கரவெட்டி மாலுசந்தியினில் இன்றிரவு நடந்திருந்தது.
அம்மேடையினில் சுயவிருப்பினில் கருத்து தெரிவிக்கப்போவதாக தெரிவித்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப்பிரதிநிதியொருவர் உரையாற்றினார்.
நான் போலியாக உருவாக்கப்பட்டுள்ள மாணவர் அமைப்பு தொடர்பினில் கவலை கொண்டுள்ளேன்.தற்போது தான் இனஅழிப்பிற்கான சர்வதேச விசாரணைக்காக போரடி தமிழ் மக்களது மனங்களினில் மதிப்பினை மாணவர் ஒன்றியம் பெற்றிருந்தது.
இப்போது தமது சுயநலத்திற்காக கூட்டமைப்பு போலியான மாணவர் அமைப்பொன்றை அமைத்து அறிக்கையொன்றினை கூட்டமைப்பிற்காக வெளியிட செய்துள்ளது.
நான் எந்தவொரு அரசியல் கட்சி சார்ந்தவனுமல்ல.அதில் ஆர்வம் கொண்டவனுமல்ல.ஆனால் மாணவர்களது பெயரினை பயன்படுத்தி சரவணபவனும் உதயனும் செய்வது மிக கேவலமான அரசியலாகும்.
அதிலும் உதயன் ஊடகவியலாளர்கள் என்ற பேரினில் சிலர் அங்கு வருகை தந்து இந்த போலிநாடகத்தை அரங்கேற்றியிருப்பது ஊடகத்துறைக்கே கேவலமானதென அம்மாணவ பிரதிநிதி மேலும் தெரிவித்தார்.
கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தற்போதைய வேட்பாளரும் உதயன் நாளிதழ் உரிமையாளருமான சரவணபவனின் ஏற்பாட்டிலேயே அனைத்தும் நடந்துள்ளது.
கடித தலைப்புக்கள் அங்கேயே அச்சிடப்பட்டுள்ளது.இறப்பர் முத்திரைகள் கூட அங்கிருந்தே தயாரிக்கப்பட்டு எடுத்து வரப்பட்டுள்ளதாகவும் அப்பிரதிநிதிகள் அம்பலப்படுத்தியுள்ளனர்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியினில் பிரச்சார கூட்டமொன்று கரவெட்டி மாலுசந்தியினில் இன்றிரவு நடந்திருந்தது.
அம்மேடையினில் சுயவிருப்பினில் கருத்து தெரிவிக்கப்போவதாக தெரிவித்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப்பிரதிநிதியொருவர் உரையாற்றினார்.
நான் போலியாக உருவாக்கப்பட்டுள்ள மாணவர் அமைப்பு தொடர்பினில் கவலை கொண்டுள்ளேன்.தற்போது தான் இனஅழிப்பிற்கான சர்வதேச விசாரணைக்காக போரடி தமிழ் மக்களது மனங்களினில் மதிப்பினை மாணவர் ஒன்றியம் பெற்றிருந்தது.
இப்போது தமது சுயநலத்திற்காக கூட்டமைப்பு போலியான மாணவர் அமைப்பொன்றை அமைத்து அறிக்கையொன்றினை கூட்டமைப்பிற்காக வெளியிட செய்துள்ளது.
நான் எந்தவொரு அரசியல் கட்சி சார்ந்தவனுமல்ல.அதில் ஆர்வம் கொண்டவனுமல்ல.ஆனால் மாணவர்களது பெயரினை பயன்படுத்தி சரவணபவனும் உதயனும் செய்வது மிக கேவலமான அரசியலாகும்.
அதிலும் உதயன் ஊடகவியலாளர்கள் என்ற பேரினில் சிலர் அங்கு வருகை தந்து இந்த போலிநாடகத்தை அரங்கேற்றியிருப்பது ஊடகத்துறைக்கே கேவலமானதென அம்மாணவ பிரதிநிதி மேலும் தெரிவித்தார்.
No comments
Post a Comment