மிரிஹான பிரதேசத்தில் வெள்ளை வானில் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட மூன்று இராணுவ உறுப்பினர்கள் குறித்து மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவிடம் காவற்துறையினர் நேற்று விசாரணை நடத்தியுள்ளனர்.
போலி வாகன இலக்கத்தகட்டுடன் இந்த இராணுவ உறுப்பினர்கள் பயணம் செய்து கொண்டிருந்த போது மிரிஹான காவற்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட மூவரும் தனது பாதுகாப்புக்கு பொறுப்பாக பணியாற்றும் இராணுவத்தினர் என பிரசன்ன சில்வா ஏற்றுக்கொண்டுள்ளார்.
அத்துடன் அவர்களிடம் இருந்த துப்பாக்கி தனது உத்தியோகபூர்வ துப்பாக்கி எனவும் அவர் கூறியுள்ளார்.
அதேவேளை இந்த வெள்ளை வான் இராணுவத்திற்கு சொந்தமானது எனவும் அதில் போலி இலக்கத்தகடு பொருத்தப்பட்டமை சம்பந்தமான விடயங்களை வெளியிட முடியாது எனவும் மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா, காவற்துறையினரின் விசாரணைகளின் போது குறிப்பிட்டுள்ளார்.
No comments
Post a Comment