Latest News

July 07, 2015

ஶ்ரீலங்கா ஜனாதிபதியை காணவில்லை ரணில்,சந்திரிக்கா அதிர்ச்சி
by admin - 0

நேற்று காலை 7 மணியளவில் தனது மகளான சத்துரிக்கா சிறிசேனவிற்கு சொந்தமான ஹோட்டல் பகுதி ஒன்றை திறக்கவென பொலன்னறுவை சென்ற ஶ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பகல் வேளையில் ஹிருணிகாவின் திருமணத்திற்கு சாட்சி கையெழுத்து இட கொழும்பு திரும்பியுள்ளார்.

அதன்பின் கண்டி நோக்கிச் சென்றுள்ள ஶ்ரீலங்கா ஜனாதிபதி தற்போது யாருக்கும் கண்டுபிடிக்க முடியாத அளவு காணாமல் போயுள்ளார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவும் பிரதமர் ரணிலும் பல தடவைகள் தொலைபேசியில் தொடர்பு கொண்ட போதும் ஜனாதிபதியை அடைய முடியவில்லை. ஶ்ரீலங்கா ஜனாதிபதியின் பாதுகாப்பு தரப்பும் ஜனாதிபதி குறித்து தகவல் வழங்க மறுத்துள்ளனர்.

 
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் அநுர பிரியதர்ஷன யாப்பாவை அழைத்து அவரிடம் இராஜினாமா கடிதம் பெற்றுக் கொள்ளவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா மற்றும் பிரதமரிடம் ஜனாதிபதி மைத்திரி நேற்று உறுதி அளித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது ஜனாதிபதி உள்ள இடத்தை கண்டுபிடிக்க முடியாதுள்ளது.

 வேட்பு மனு தொடர்பில் தீர்மானம் எடுக்க கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் ஜனாதிபதியை தேடி வருகின்றனர். ஏதேனும் காரணத்திற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தான் இருக்கும் இடத்தை யாருக்கும் சொல்லாமல் தொலைபேசியையும் நிறுத்தி வைத்துள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
« PREV
NEXT »

No comments