Latest News

July 15, 2015

83 ஆம் ஆண்டு இனப்படுகொலையின் 32ஆம் ஆண்டு நினைவுதினம் - லண்டன்
by admin - 0

விவசாயி, தமிழ் செய்திகள், ஈழம் செய்திகள், யாழ்ப்பாண  செய்திகள், இந்தியசெய்திகள், கவிதைகள், விடுப்பு, பல்கலைக்கழகம், விடுதலை, கடல், தரை, இலங்கை, வவுனியா, கிளிநொச்சி, மன்னார், மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, முல்லைதீவு, TGTE, Transnational Government of Tamil Eelam, Tamilnews, tamilwin, athirvu, newjaffna, jaffna,vivasaayi, kavinthan, tamilwin,lankasri, jaffna, kilinochchi, vavuniya, TGTE,TGTE-WCE,WCE-TGTE,TGTE-HOMELAND.ORG, Transnational Government of TamilEelam, www.lankasri.com,tgte-us, naathamnews.com, முள்ளிவாய்க்கால்,tamilwin , நாம் தமிழர்,Mahindha
83 ஆம் ஆண்டு இனப்படுகொலையின் 32ஆம் ஆண்டு நினைவுதினம் - லண்டன்
1983 ஆம் ஆண்டு யூலை மாதம் 23ஆம் திகதி இலங்கையின் சிங்கள பேரினவாத அரசினால் தமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட இனப்படுகொலையின் 32ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மாபெரும் நினைவேந்தல் மற்றும் ஆர்ப்பாட்ட நிகழ்வொன்றினை எதிர்வரும் யூலை மாதம் 23 ஆம் திகதி பிற்பகல் 4 மணி முதல் 7 மணி வரை பிரித்தானியா பிரதம மந்திரியின் உத்தியோக பூர்வ வதிவிடமான No10 Downing Street இல் பிரித்தானிய தமிழர் பேரவை ஏற்பாடு செய்துள்ளது.

இலங்கையின் ஆட்சியில் இருந்த இரு இனவாத அரசுகளும் தமிழ் மக்கள் மீதான தொடர்ச்சியான இனப்படுகொலையினை வெவ்வேறு வடிவங்களில், வெவ்வேறு காலப்பகுதிகளில் அரங்கேற்றியுள்ளது.

பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் சர்வதேசத்திடம் நீதியை வேண்டிநிற்கும் இத்தருணத்தில் அதற்கான அதிகாரத்தினை மீண்டும் குற்றவாளிகளின் கரங்களில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.கடந்த 67 ஆண்டுகள் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் இனப்படுகொலைக்கான நீதியை வழங்க மறுக்கும் சிங்களப் பேரினவாத அரசு உள்ளக விசாரணை எனும் கபட நாடகம் மூலம் தொடர்ச்சியாக தமிழ் மக்களுக்கு நீதியை வழங்க மறுக்கிறது.

எனவே தமிழ் மக்களாகிய நாம் எமக்கு எதிராக இழைக்கப்படும் இனப்படுகொலைகளுக்கு நீதி வேண்டி எதிர்வரும் யூலை மாதம் 23ஆம் திகதி ஒழுங்கு செய்யப்பட்டுள்ள கறுப்பு யூலையின் 32ஆம் ஆண்டுநினைவேந்தல் மற்றும் ஆர்ப்பாட்ட நிகழ்வில் பெரும்திரளாக கலந்து கொண்டு எமது குரலை ஓங்கி ஒலிக்கச் செய்ய வேண்டும்.

வல்லாதிக்க சக்திகளின் ஆடு களமாக மாற்றப்பட்டுள்ள இலங்கைத் தீவில் தமது பூகோள நலன்களுக்காக இலங்கையின் ஆட்சி பீடத்தினைத் திருப்திப்படுத்த அவர்கள் முனைவதையும் இலங்கை அரசுக்கெதிராக பல்லாயிரம் கண்கண்ட சாட்சியங்கள் இருந்தும், உள்ளக விசாரணையை நோக்கி மெதுவாக காய்களை நகர்த்திச் செல்லும் போக்கினையும் நாம் முறியடிக்க வேண்டும்.
1956இலிருந்து 2000ஆம் ஆண்டு வரை 115 படுகொலைகள் தொடர்பான பல சாட்சியங்கள் உள்ளன. அதன் பின் நடந்த மோசமான குற்றங்களும் சாட்சியங்களாக தொகுக்கப்பட்டுள்ளன. இவற்றினை ஒன்றன் பின் ஒன்றாக நாம் வெளியிட்டு வருகின்றோம். இவற்றுக்குக் காரணமான UNP மற்றும் SLFP அரசுகளின் கையில் உள்ளகவிசாரணையை கொடுக்க நாம் அனுமதிக்கலாகாது.

மேற்படி ஒவ்வொரு படுகொலையிலும் பாதிக்கப்பட்ட மக்கள் அல்லது உறவினர்கள் நேரடியாக எம்முடன் தொடர்பு கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.

நீதி வேண்டி நிற்கும் தமிழ் மக்களின் கோரிக்கைக்கு இவர்களின் சாட்சியங்கள் வலுவூட்டும். அதன் மூலம் வல்லாதிக்க சக்திகளின் சூழ்ச்சிகளை முறியடிப்போம்!

விவசாயி, தமிழ் செய்திகள், ஈழம் செய்திகள், யாழ்ப்பாண  செய்திகள், இந்தியசெய்திகள், கவிதைகள், விடுப்பு, பல்கலைக்கழகம், விடுதலை, கடல், தரை, இலங்கை, வவுனியா, கிளிநொச்சி, மன்னார், மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, முல்லைதீவு, TGTE, Transnational Government of Tamil Eelam, Tamilnews, tamilwin, athirvu, newjaffna, jaffna,vivasaayi, kavinthan, tamilwin,lankasri, jaffna, kilinochchi, vavuniya, TGTE,TGTE-WCE,WCE-TGTE,TGTE-HOMELAND.ORG, Transnational Government of TamilEelam, www.lankasri.com,tgte-us, naathamnews.com, முள்ளிவாய்க்கால்,tamilwin , நாம் தமிழர்,Mahindha83ஆம் ஆண்டு கறுப்பு யூலைப் படுகொலைகள் உட்பட தமிழ் மக்களிற்கெதிராக நடத்தப்பட்ட அனைத்து இன அழிப்பு நடவடிக்கைகளுக்கும் ஒரு சர்வதேச சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையினை உலகத் தமிழ் மக்கள் கை விடப் போவதில்லை என்பதை உலகிற்கு உணர்த்துவோம்!
« PREV
NEXT »

No comments