பிரித்தானியாவை தளமாகக் கொண்ட நம்பிக்கை ஒளி அமைப்பின் இணை நிறுவனமாகிய தாயகத்தில் இரண்டு வருடங்களாக செயற்பட்டு வரும் இணைக்கும் இதயங்கள் அறக்கட்டளையினரால் வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள பாடசாலைகளுக்கு 10,000 புலமை ஒளிபுத்தகங்களை வழங்கப்பட்டு வருகின்றது வவுனியா வடக்கு கல்வி வலயத்தை சேர்த 57 பாடசாலைகளுக்கு 615புத்தகங்கள் வழங்கும் நிகழ்வு கோட்டக்கல்வி பணிப்பபாளர் எஸ் அமிர்தலிங்கம் தலைமையில் அண்மையில் நடைபெற்றது இந் நிகழ்வில் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் வடக்குமாகாண சபை உறுப்பினர் இந்திரராசா நம்பிக்கை ஒளி அமைப்பின் இணைப்பாளர் எஸ் சுபாஸ்கரன் மற்றும் கல்வி அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டனர்.
செய்தி எஸ்.செல்வதீபன்
No comments
Post a Comment