தேசிய அரசாங்கத்திற்காக ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எவ்வித புரிந்துணர்வு உடன்படிக்கையையும் ஏற்படுத்திக் கொள்ளவில்லை என நிமல் சிறிபால டி சில்வா அறிக்கையொன்றின் ஊடாக தெரிவித்துள்ளார்.
அவ்வாறானதொரு புரிந்துணர்வு உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டிருப்பின், நாட்டிற்கு அதனை பகிரங்கப்படுத்துமாறு எதிர்க்கட்சித் தலைவரின் அறிக்கையில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
அதன் பிரதியை ஊடகங்களுக்கு வழங்குமாறும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் தேர்தலில் ஏற்படக்கூடிய தோல்வியை தவிர்க்கும் வகையில், கற்பனைக் கதைகளைக்கூறி அரசாங்கம் மக்களை தவறான வழியில் இட்டுச் செல்வதாக நிமல் சிறிபால டி சில்வா குற்றஞ்சாட்டினார்.
No comments
Post a Comment