Latest News

June 29, 2015

ஜூலை முதலாம் திகதி மஹிந்தவின் முக்கிய அறிவிப்பு!
by Unknown - 0

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ, எதிர்­வரும் பாரா­ளு­மன்ற தேர்தல் குறித்த தனது நிலைப்பாட்டை ஜூலை மாதம் முதலாம் திகதி புதன் கிழ­மை­ய அறிவிக்கவுள்ளதாக முன்னாள் ஜனா­தி­ப­தியின் ஊடகப் பேச்­சாளர் ரொஹான் வெலி­விட்ட தெரிவித்துள்ளார்.

அம்­பாந்­தோட்டை, மெத­மு­ல­னையில் உள்ள முன்னாள் ஜனா­தி­ப­தியின் உத்­தி­யோ­க­பூர்வ இல்­லத்தில் வைத்து காலை 10.00 மணிக்கு இந்த அறி­விப்பு வெளி­யி­டப்­படும் என குறிப்­பிட்ட முன்னாள் ஜனா­தி­ப­தியின் ஊடகப் பேச்­சாளர், இதன் போது பல முன்னாள் அமைச்­சர்கள் மற்றும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் கலந்­து­கொள்­ள­வுள்­ள­தா­கவும் சுட்­டிக்­காட்­டினார்.

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ செயற்­பாட்டு அர­சி­ய­லுக்கு வரு­வாரா இல்­லையா என்­பது குறித்து ஒவ்­வொரு அர­சியல் வாதியும் தத்­த­மது கருத்­துக்­க­ளையும் ஊகங்­க­ளையும் வெளி­யிட்டு வரு­கின்­றனர். அதே போன்று இன்னும் பல விட­யங்கள் குறித்தும் பல இணை­யத்­த­ளங்கள் ஊடாக பல்­வேறு வதந்­திகள் பரப்­பப்­ப­டு­கின்­றன. இவை அனைத்­திற்கும் ஜூலை முதலாம் திகதி பதில் கிடைக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டினர்
« PREV
NEXT »

No comments