முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் குறித்த தனது நிலைப்பாட்டை ஜூலை மாதம் முதலாம் திகதி புதன் கிழமைய அறிவிக்கவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் ரொஹான் வெலிவிட்ட தெரிவித்துள்ளார்.
அம்பாந்தோட்டை, மெதமுலனையில் உள்ள முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து காலை 10.00 மணிக்கு இந்த அறிவிப்பு வெளியிடப்படும் என குறிப்பிட்ட முன்னாள் ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர், இதன் போது பல முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ளவுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ செயற்பாட்டு அரசியலுக்கு வருவாரா இல்லையா என்பது குறித்து ஒவ்வொரு அரசியல் வாதியும் தத்தமது கருத்துக்களையும் ஊகங்களையும் வெளியிட்டு வருகின்றனர். அதே போன்று இன்னும் பல விடயங்கள் குறித்தும் பல இணையத்தளங்கள் ஊடாக பல்வேறு வதந்திகள் பரப்பப்படுகின்றன. இவை அனைத்திற்கும் ஜூலை முதலாம் திகதி பதில் கிடைக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டினர்

No comments
Post a Comment