ஜனாதிபதியின் கட்டளைகளை நிறைவேற்ற முடியாத நிலைமை காணப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு – மைலம்பாவெளியில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோது அவர் மேலும் தெரிவித்ததாவது,
ஜனநாயக நாட்டில் அதை ஆளுகின்ற ஜனாதிபதியின் உத்தரவென்பது மற்றையவர்கள் அனுசரித்து செல்கின்ற விடயமாக இருக்கின்றது. ஆனால் இலங்கையில் ஜனாதிபதி கட்டளையிட்டாலும் கூட அந்த விடயங்களை அமுல்படுத்த முடியாத ஒரு திண்டாட்டம் இருப்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். துப்பாக்கிகள் மௌனித்து விட்டன சுதந்திரமாக செல்ல முடியும் என கூறியிருந்தார்கள். ஆனால் மண்டூரில் என்ன நடந்தது? ஒரு அரச உத்தியோகத்தரை துப்பாக்கியுடன் சென்ற இருவர் சுட்டுவிட்டுச் சென்றுள்ளார்கள். இரண்டு வாரங்களை அண்மித்துள்ள நிலையில் இன்னும் எவரையும் பிடிக்கவில்லை.
No comments
Post a Comment