ஜனாதிபதி மற்றும் முன்னாள் ஜனாதிபதியை இணைக்கும் நோக்கில் நியமிக்கப்பட்ட 6 பேர் கொண்ட குழுவின் அறிக்கை இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கவுள்ளதாக குழுவின் தலைவர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டப்ல்யூ.டீ.செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் வேட்புரிமை வழங்க ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளதாக அக்குழுவின் உறுப்பினர் டீ.பீ.ஏக்கநாயக்க ஊடகம் ஒன்றுக்கு குறிப்பிட்டுள்ளார்.

No comments
Post a Comment