Latest News

June 04, 2015

டக்ளஸ் கைது செய்யப்படுவாரா?
by admin - 0


ஈபிடிபியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவிற்கு எதிராக ஊழல் ஒழிப்புக் குழு செயலகத்தில் இன்று காலை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
யாழ்.மாவட்ட பார ஊர்திகள் சங்கத்தின் தலைவரால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 
பார ஊர்திகள் சங்கத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பிலேயே முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 
குறித்த சங்கத்தின் பார ஊர்திகளை முன்னாள் அமைச்சர் டக்ளஸின் மகேஸ்வரி நிதியத்தின் தேவைகளுக்கும் பயன்படுத்தி வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இதேவேளை, பார ஊர்திகள் சங்கத்தில் பதிவு செய்யப்படும் ஒவ்வொரு பார ஊர்திக்கும் தலா 5000 ரூபாவை அறிவிட்டு வந்ததாகவும் அதனை மீள செலுத்தவில்லையெனவும் அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
பார ஊர்திகள் சங்கத் தலைவர் முறைப்பாட்டினை பதிவு செய்யும்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் உடனிருந்தார்.
« PREV
NEXT »

No comments