Latest News

June 02, 2015

யாழ்.வடமராட்சி கிழக்கில் கணவன் மனைவி சடலமாக மீட்பு!
by Unknown - 0

யாழ்.வடமராட்சி கிழக்கு தாளையடி பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து கழுத்தில் வெட்டுக்காயத்துடன் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன் வீட்டின் கிணற்றில் இருந்தும் கழுத்தில் வெட்டுக்காயத்துடன் ஆணின் சடலம் ஒன்றும் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்ட இருவரும் கணவன் மனைவி ஆவார்கள். தாளையடியை சேர்ந்த சிவபாலன்(வயது 40) அவரது மனைவியான எஸ்.சுபாஷினி (வயது 40) ஆகியோரே அவ்வாறு சடலமாக மீட்கப்பட்டு உள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் பளை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேவேளை நேற்றைய தினம் இரவு 9.30 கணவன் மனைவி இருவருக்கும் இடையில் குடும்ப தகராறு ஏற்பட்டதாகவும் அதனை அடுத்து கணவன் மனைவியின் கழுத்தை கத்தியால் அறுத்து படுகொலை செய்ததுடன் தானும் தனது கழுத்தை அறுத்துக்கொண்டு கிணற்றினுள் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
« PREV
NEXT »

No comments