Latest News

June 16, 2015

பசில் விடுதலை -நாடகம் முடிந்தது
by admin - 0

விவசாயி, தமிழ் செய்திகள், ஈழம் செய்திகள், யாழ்ப்பாண  செய்திகள், இந்தியசெய்திகள், கவிதைகள், விடுப்பு, பல்கலைக்கழகம், விடுதலை, கடல், தரை, இலங்கை, வவுனியா, கிளிநொச்சி, மன்னார், மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, முல்லைதீவு, TGTE, Transnational Government of Tamil Eelam, Tamilnews, tamilwin, athirvu, newjaffna, jaffna,vivasaayi, kavinthan, tamilwin,lankasri, jaffna, kilinochchi, vavuniya, TGTE,TGTE-WCE,WCE-TGTE,TGTE-HOMELAND.ORG, Transnational Government of TamilEelam, www.lankasri.com,tgte-us, naathamnews.com, முள்ளிவாய்க்கால்,tamilwin , நாம் தமிழர்
நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சுமார் ஒரு மாத காலத்திற்கு மேல் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
பசில் ராஜபக்ஷவுடன் சேர்த்து கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் செயலாளர் வைத்தியர் நிஹால் ஜயதிலக, திவிநெகும திணைக்கள பணிப்பாளர் ஆகியோருக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு கோரிக்கை இன்று (15) பரிசீலனைக்கு வந்தபோது சந்தேகநபர்களை 1 லட்சம் ரூபா சரீரப் பிணையிலும் தலா 10 லட்சம் ரூபா பெறுமதியான 4 ஆள் பிணைகளிலும் விடுதலை செய்யுமாறு நீதிபதி சரோஜினி குசலா வீரவர்த்தன உத்தரவிட்டார்.
பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வர் கடந்த ஏப்ரல் 22ம் திகதி பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை  விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த டி.வி.உபுலும்  இன்று (15) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட போது, அவரை 25,000 ரூபா ரொக்கப் பிணையிரும் தலா 10 லட்சம் ரூபா பெறுமதியான இரண்டு ஆள் பிணையிலும் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
« PREV
NEXT »

No comments