துணுக்காய் கொல்லவிளாங்குளத்தில் ஜெகசுதன் எனும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பைச் சேர்ந்த பிரதேசசபை உறுப்பினர் அப்பகுதியில் வசிக்கும் 53 பெண்களை வாழ்வாதாரம் தருவதாகவும் வீடமைப்புக்கு உதவி புரிவதாகவும் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாகவும் தெரிவித்து அவர்களை ஏமாற்றி பாலியலுறவு கொண்டுள்ளது அதனை தனது கைத்தொலைபேசியில் எடுத்துள்ளதும் அப்பகுதி மக்களுக்கு தெரியவந்துள்ளது.
இதனையடுத்து அவனுடன் தொடர்பில் இருந்த இரு குடும்பப் பெண்கள் அவமானம் தாங்காது தற்கொலை செய்துள்ளனர். இதனையடுத்து அப்பகுதி மக்கள் கடும்கோமுற்று ஜெகசுதனைத் தேடியபோது அவன் இன்றுவரை அவர்களின் கைகளில் அகப்படாது மாயமாகிவிட்டான்.
இவனை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் இருந்து நீக்கவும் இவன் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவும் இவனை சட்டத்தின் பிடியில் ஒப்படைக்கவும் கோரி பெண்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் மாவை. சேனாதிராசா மற்றும் கூட்டமைப்பின் முக்கிய உறுப்பினர்களைச் சந்தித்திருந்தனர்.
குறித்த பெண்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் கொல்லவிளாங்குளம் சென்று ஜெகசுதனால் பாதிக்கப்பட்டவர்களையும் அப்பகுதி மக்களையும் நேரடியாகச் சந்தித்திருந்தனர்.
அதன் பின்னர் மாவை.சோனாதிராசாவைச் சந்தித்த போது சேனாதிராசா அவன் மீது நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்துவிட்டு பின்னர் அது பற்றி எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காது அவர்களை ஏமாற்றத் தொடங்கியுள்ளார்.
இது தொடர்பாக பெண்கள் அமைப்பு பிரதிநிதி ஒருவர் சேனாதிராசாவிடம் கேட்ட போது அந்த பிரதிநிதிக்கு வாழ்வாதார நிதியாக ஒருலட்சம் ரூபா தருவதாகக் கூறி குறித்த சம்பவத்தைப் பற்றி கருத்தில் எடுக்க வேண்டாம் எனவும் தெரிவித்ததாக அப் பெண்கள் அமைப்புப் பிரதிநிதி தெரிவித்துள்ளார்.
இந்த செய்திக்கு கூட்டமைப்பு பதில் என்ன ? தற்போது ஜெகசுதன் சிங்கப்பூரில் இருப்பதாக கூறப்படுகிறது இதற்கு கூட்டமைப்பு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது ?இதுவே மக்களின் கேள்வி
இந்த செய்திக்கு கூட்டமைப்பு பதில் என்ன ? தற்போது ஜெகசுதன் சிங்கப்பூரில் இருப்பதாக கூறப்படுகிறது இதற்கு கூட்டமைப்பு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது ?இதுவே மக்களின் கேள்வி
No comments
Post a Comment