Latest News

June 27, 2015

“அரும்புகளின்” 21 வது இலவசக் கல்வியகம் முல்லைத்தீவு மாவட்டம் சுதந்திரபுரத்தில் ஆரம்பிக்கப்படுள்ளது
by admin - 0

உலகத் தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் ஆணையத்தின் கல்வி வளர்சித்திட்டப்பிரிவான “அரும்புகள்” போரினால் பாதிக்கப்பட்டு முழுமையாக சிதைக்கப்பட்ட கிராமங்களில் மாலை நேர கல்வி செயற்பாடுகளை இலவசமாக முன்னெடுத்து வருகின்றமை நாம் அறிந்ததே. 

அந்த வகையில், 2009 யுத்தத்தின் போது மிகவும் மோசமான பாதிப்புக்குள்ளான முல்லைத்தீவு மாவட்டத்தின் சுதந்திரபுரம் பிரதேசத்திட்குட்பட்ட இருட்டுமடு கிராமத்தில் தனது கல்வி உதவி திட்டங்களை ஆரம்பித்துள்ளது. சுதந்திரபுரம் அ.த.க.பாடசாலையில் 25 மாணவர்களுக்கான மாலை நேர வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சுதந்திரபுரம் அ.த.க.பாடசாலை அதிபர் திரு. லோகேஸ்வரன் தலைமையில் 21.06.2015 அன்று நடைபெற்ற ஆரம்ப நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக வடமாகாணசபை உறுப்பினர் திரு. ரவிகரன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார். 

ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்ட நிகழ்வில் போரினால் பாதிக்கப்பட்டு மேலதிக கல்வி வசதிகள் இன்றி இருக்கின்ற மாணவர்களுக்கு “அரும்புகளின்” சேவை உன்னதமானது என்று திரு. ரவிகரன் அவர்கள் தெரிவித்தார். “அரும்புகள்” தனது சேவையினை உயர் வகுப்பு மாணவர்களுக்கும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையினையும் முன்வைத்து பேசினார் ரவிகரன் அவர்கள்.

மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களான அப்பியாசக்கொப்பிகள், பேனா, பென்சில், அழிறப்பர் போன்றவையும் “அரும்புகளால்” வழங்கப்பட்டன. மாணவர்களின் பெற்றோர்கள், “ அரும்புகளுக்கும்” அரும்புகள் சார்பாக புலம் பெயர்ந்த தேசத்திலிருந்து உதவும் உன்னத உறவுகளுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.
« PREV
NEXT »

No comments