இந்த விளையாட்டுப்போட்டிக்கு கௌரவ விருந்தினர்களான ஸ்ராஸ்பூர்க் மாநகர உதவி மேயரும், சில்ரிகைம்மாநகர சபைஉதவிமேயரும், அல்சாஸ் மாநில கட்சித் தலைவி ஆகியோருடன், பிரதம விருந்தினர்களாக அந்அல்சாஸ், பக்தி முந்தீர்அமைப்புகளின் தலைவர் திரு. குப்தா அவர்களும், ஸ்ராஸ்பூர்க்சமூக ஆர்வலரும், தொழிலதிபருமான திரு. சாந்தன் அவர்களும்கலந்து கொண்டு விளையாட்டுப் போட்டியை மங்கள விளக்கேற்றி, ஒலிம்பிக் சுடர் ஏற்றி ஆரம்பித்து வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து அணிவகுப்பு மரியாதையுடன்விளையாட்டுப்போட்டி ஆரம்பமாகியிருந்தது. ஓட்டம், தடைஓட்டம், தேசிக்காய் ஓட்டம், பழம் பொறுக்கல், தவளைப் பாய்ச்சல், கிளித்தட்டு, கயிறு இழுத்தல், துடுப்பந்தாட்டம் போன்ற விளையாட்டுக்கள் அவரவர் வயதெல்லைக்கு ஏற்ப நடைபெற்றிருந்தது.
மழலைகள் பிரிவில் இருந்து முதியவர் வரை விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டிருந்ததுடன்இறுதியில் நடைபெற்ற வினோத உடைப்போட்டி தாயகத்தின் நிஜத்தை எம் கண் முன்னால் நிறுத்தியிருந்தது.
போட்டியிலே கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வெற்றிக் கிண்ணங்களும், பதக்கங்களும்,சான்றிதழ்களும்வழங்கப்பட்டன.பி.பகல் 6 மணியளவில் இவ் விளையாட்டுப்போட்டி இனிதே நிறைவுக்குவந்தது
No comments
Post a Comment