Latest News

May 06, 2015

இந்த மாத இறுதியில் நாடாளுமன்றம் கலைக்கப்படும்-அமைச்சர் லக்ஷ்மண்ண கிரியெல்ல
by Unknown - 0

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி தயாரித்த தேர்தல் முறை சீர்திருத்தம் அடங்கிய 20 ஆம் அரசியலமைப்பு சீர்திருத்த சட்டமூலம் எதிர்வரும் 13 ஆம் திகதி அமைச்சரவைக்கு சமர்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை நாடளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த வெளியிட்டுள்ளார்.

சுதந்திர கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளுக்கு இந்த சட்ட மூல வரைவு கையளிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய தேர்தல் முறை சீர்திருத்தின் கீழ் தேசிய பட்டியலில் மற்றும் விகிதாசார முறையில் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகும் பெண்கள் பிரதிநிதித்துவம் 50 வீதமாக அதிகரிக்கப்பட வேண்டும் என வெளிவிவகார பிரதியமைச்சர் அஜித் பீ பெரேரா தெரிவித்துள்ளார்.

20 ஆம் அரசியலமைப்பு சீர்திருத்தம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர், இந்த மாத இறுதியில் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என சபை தலைவர் அமைச்சர் லக்ஷ்மண்ண கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
« PREV
NEXT »

No comments