ஊடவியலாளர்களை பாதுகாக்கும் கடப்பாட்டில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் மோசமான நிலையில் உள்ளன என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சர்வதேச ஊடகவியலாளர்களுக்கான சம்மேளனம் இந்தக்குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது. 2014-15ஆம் ஆண்டுக்கான சம்மேளனத்தின் அறிக்கையில் இந்தக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில் ஊடகவியலாளர்களின் இறைமை மற்றும் அவர்கள் கடத்தல், தாக்குதல் கொலை செய்யப்படுதல் என்பவற்றில் இருந்து காப்பாற்றப்படுவதற்கான.
உறுதிப்பாட்டுக்கான முன்னெடுப்புக்கள் அவசியம் என்று அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல்களை நடத்துகின்றவர்கள் சட்டத்துக்கு முன்நிறுத்தப்படவேண்டும் என்றும் அந்த சம்மேளனம் கேட்டுள்ளது.
சர்வதேச ஊடகவியலாளர் சம்மேளனம் சர்வதேசத்தில் 100 நாடுகளில் 6லட்சம் உறுப்பினர்களை கொண்டுள்ளது.
No comments
Post a Comment