தற்போதைய அரசாங்கம் அரசியல் காரணங்களை முன்வைத்து, முன் எடுக்கும் கைது மற்றும் விசாரணையை ஏற்று கொள்ள முடியாது என முன்னாள் அமைச்சர் ஜீ எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அபயாராம விகாரையில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
இது சாதாரண விசாரணை அல்ல.பக்கசார்பற்ற விசாரணை அல்ல அரசியல் வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாகும். முதலில் எந்தவித சந்தேகமும் இன்றி, மத்திய வங்கியின் ஆளுநரிடம் விசாரணை நடத்த வேண்டும்.
அது தொடர்பாக எந்தவிதமான செயற்பாடுகளும் முன் எடுக்கப்படவில்லை என முன்னாள் அமைச்சர் ஜீ எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்
இதேவேளை, எதிர்தரப்பு அரசியல்வாதிகளை தண்டித்து, அரசிலை வெற்றி கொள்ள அரசாங்கம் முயற்சிக்கும் செயற்பாடுகளை தோற்கடிக்கவுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது.
அந்த முன்னணியின் ஊடக பேச்சாளர் மொஹமட் முசம்மில் இதனை தெரிவித்துள்ளார்.
No comments
Post a Comment