Latest News

May 06, 2015

மகிந்தவைச் சந்திக்க மைத்திரி நிபந்தனை!
by Unknown - 0

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடனான சந்திப்பிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிபந்தனைகளை விதித்துள்ளதாக தெரியவருகிறது.முன்னாள் ஜனாதிபதிக்கும் தற்போதைய ஜனாதிபதிக்கும் இடையில் 6 ஆம் திகதி விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ள நிலையிலேயே ஜனாதிபதி மைத்திரி இந்த நிபந்தனையை விதித்துள்ளார். 

முன்னாள் ஜனாதிபதியை தனியாக சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தான் தயார் இல்லை எனவும் முன்னாள் ஜனாதிபதியுடன் அவரது பிரதிநிதிகளும் தமது கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களும் இந்தச் சந்திப்பில் பிரசன்னமாக வேண்டும் எனவும் ஜனாதிபதி நிபந்தனை விதித்துள்ளார். 

மேலும் மகிந்த ராஜபக்ஷவின் சார்பில் கலந்துகொள்ளவுள்ள பிரதிநிதிகள் குறித்து இன்றைக்குள் அறிவிக்கவேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். அதுமாத்திரமல்லாது முன்னாள், இந்நாள் ஜனாதிபதிகளுக்கிடையிலான சந்திப்பு சபாநாயகரின் இல்லத்தில் நடைபெறவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
« PREV
NEXT »

No comments