Latest News

May 27, 2015

மைத்திரி-மஹிந்த இணைந்த அரசாங்கத்தை அமைக்க நடவடிக்கை-சுசில்
by Unknown - 0

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் இணைத்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அரசாங்கமொன்றை அமைக்கத் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், கூட்டணியில் உள்ள 14 கட்சிகளுடன் இணைந்து இதற்கான பிரேரணையொன்றை நிறைவேற்றியுள்ளதாகவும் ஐ.ம.சு.முன்னணியின் செயலாளரும் ஸ்ரீ.ல.சு.கட்சியின் தேசிய அமைப்பாளருமான சுசில் பிரம்ஜயந்த தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டம் நிறைவடைந்துள்ளது. கூட்டமைப்பின் இந்த யோசனை குறித்து எதிர்வரும் ஓரிரு நாட்களில் ஜனாதிபதியுடனும், முன்னாள் ஜனாதிபதியுடனும் ஐ.ம.சு.முன்னணி பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளது எனவும் இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் மேலும் கூறியுள்ளார்
« PREV
NEXT »

No comments