Latest News

May 15, 2015

ஜெயலலிதாவின் விடுதலை மீண்டும் புலிகள் தலைதூக்குவர் -ஹெல உறுமயவின் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க
by Unknown - 0

தமிழகத்தின் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டுள்ளமையானது இலங்கையில் மீண்டும் விடுதலைப் புலிகள் தலைதூக்கும் ஆபத்தான நிலைமை காணப்படுகின்றது என ஹெல உறுமயவின் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்தார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தமது இழந்த உறவுகளுக்கென சிலர் முள்ளிவாய்க்காலில் தீபம் ஏற்றுகின்றனர். இவ்வாறு தீபம் ஏற்றுபவர்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தை நினைவு கூறவே தீபம் ஏற்றுகின்றனர்.

மேலும் தமிழகத்தின் ஜெயலலிதா தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளார். இந்த விடுதலை மூலம் இங்கையில் மீண்டும் புலிகள் இயக்கம் எழுச்சி பெறும் ஆபத்து காணப்படுகின்றது. எனவே நாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
« PREV
NEXT »

No comments