Latest News

April 27, 2015

யாழில் ஆயுதங்கள் மீட்பு
by admin - 0


யாழில் ஆயுதங்கள் மீட்பு
யாழ்ப்பாணம் மணிக்கூட்டு கோபுர வீதியில் அமைந்துள்ள தனியார் கட்டடத்தில் இருந்து பெருந்தொகையான ஆயுதங்கள் தற்போது மீட்கப்பட்டு வருகின்றன.

கடந்த 3 தினங்களிற்கு முன்னர் இப்பிரதேசத்தில்  தனியார் கட்டடம் குழி ஒன்றினை தோண்டிய வேளை ஆயுதங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக யாழ் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து பாதுகாப்பினை வழங்கியுள்ளதுடன்  மீட்கப்படும் ஆயுதங்களை செயலிழக்கம் செய்ய விசேட அதிரடிப் படையினரின் பிரிவு ஒன்று தற்போது ஈடுபட்டுள்ளது.

ஏற்கனவே இவ்வாயுதங்கள் மீட்கப்பட்ட பகுதி இராணுவ முகாமாக இயங்கியதுடன் 2012ஆம் ஆண்டு அப்பகுதியில் இருந்து இராணுவத்தினர் அகற்றப்பட்டிருந்தனர்.
மேலும் மீட்கப்பட்ட ஆயுதங்களில் அநேகமானவை பாவிக்க முடியாததாகவும் கைக்குண்டுவகை,மிதிவெடிகள்,மோட்டார் செல் குண்டுகள் என்பன உள்ளடங்குவதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
« PREV
NEXT »

No comments