Latest News

April 28, 2015

எனது மெய்ப்பாதுகாவலரிடம் தண்ணீர் போத்தல் ஒன்றே இருந்தது – நாமல் ராஜபக்ச
by admin - 0

எனது மெய்ப்பாதுகாவலரிடம் தண்ணீர் போத்தல் ஒன்று மட்டுமே இருந்தது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஹம்பாந்தோட்டை அங்குனுகொலபெலஸ்ஸவில் நடைபெற்ற சுதந்திரக் கட்சிக் கூட்டமொன்றில் நாமலின் மெய்ப்பாதுகாவலர் ஒருவர் கைத்துப்பாக்கியுடன் ஜனாதிபதிக்கு அருகாமையில் சென்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இராணுவ கோப்ரலான இந்த நபரை பொலிஸார் கைது செய்து, ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவினரிடம் ஒப்படைத்திருந்தனர்.

பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்களின் வாயிலாகவே அறிந்து கொண்டேன் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

எனது பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் ஜனாதிபதி ஒருவர் பங்கேற்கும் நிகழ்வு ஒன்றிற்கு ஆயுதங்களுடன் செல்வதில்லை.

எனது தந்தை மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலத்திலும் கொள்கை அடிப்படையில் எனது மெய்ப்பாதுகாவலர்கள் ஆயுதங்ளை எடுத்துச் செல்வதனை நான் அனுமதித்ததில்லை.

இந்த விடயம் குறித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு தெளிவுபடுத்தினேன்.

இந்த விடயத்தை அவ்வளவு பெரிதுபடுத்த வேண்டிய அவசியமில்லை.

எனது மெய்ப்பாதுகாவலர் கூட்டத்தை பார்வையிடுவதற்காக சென்றுள்ளார்.

கூட்டத்திற்கு சென்றவர்களுக்கு விநியோகம் செய்யப்பட்ட தண்ணீர் போத்தலையே அவர் வைத்துக் கொண்டிருந்தார்.

வேறு எந்த ஆயுதங்களையும் அவர் வைத்திருக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.


« PREV
NEXT »

No comments