Latest News

April 26, 2015

பொதுமன்னிப்பு கிடைத்தும் மகளை விடுதலை செய்யவில்லை ; உதயசிறியின் தயார் கண்ணீர்
by admin - 0

ஜனாதிபதியினால் பொதுமன்னிப்பு வழங்கியும் இதுவரை எனது மகள் விடுதலை செய்யப்படாதது பெரும் கவலையளிக்கின்றது என உதயசிறியின் தயார் தெரிவித்துள்ளார்.

 
சிகிரியாவில் உள்ள சுவரில் எழுதிய குற்றத்திற்காக மட்டக்களப்பு - சித்தாண்டியைச் சேர்ந்த சின்னத்தம்பி உதயசிறி சிறைத் தண்டனை அனுபவித்து வருகின்றார்.
 
எனினும்  ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ்  அவரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனினும் அவர் நீதிமன்றத்தின்  ஊடாக விடுதலை செய்யப்படவில்லை.
 
அநுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள உதயசிறியை அவரது தாய் தவமணி கடந்த வியாழக்கிழமை சென்று பார்த்துள்ளார். இதன்போது தன்னை விரைவாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுங்கள் என மகள் தன்னிடம் மன்றாடியதாகவும் தாய் குறிப்பிட்டுள்ளார்.
 
மேலும்  ஜனாதிபதி எனது மகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கியதாக கூறியும் இதுவரை  விடுதலை பற்றி எதுவும் அறிவிக்கப்படவில்லை. இது தொடர்பாக எந்தவொரு அறிவித்தலும் அநுராதபுரம் சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் வரவில்லை என சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்ததாக தாய்  தெரிவித்துள்ளார்.
 
மகளை பார்ப்பதற்காக அநுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்ற போது, நான் மகளுக்காக கொண்டு சென்ற எந்த உணவுப் பொருளையும் உள்ளே கொண்டு செல்ல சிறைச்சாலை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. 
 
சவர்க்காரத்தை மட்டும் கொண்டு செல்ல அனுமதித்தனர் எனவும் தாய் மேலும் குறிப்பிட்டார். 
 
இதேவேளை, ஜனாதிபதியினால் பொதுமன்னிப்பில் உதயசிறி விடுவிக்கப்பட்டார்.எனினும் சிங்கள - தமிழ்  புத்தாண்டினை முன்னிட்டு விடுமுறைகள் அதிகளவாக இருந்தமையால் அலுவலக பணிகள் நடைபெறவில்லை. 
 
இதனால் விரைவில் விடுதலைக்கான ஆவணங்கள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 
« PREV
NEXT »

No comments