Latest News

April 06, 2015

தொலைந்த உறவுகள் எங்கே-கோட்டையில் ஆர்ப்பாட்டம்
by admin - 0

இறுதிப் போரின் போது தமது உறவுகளை தொலைத்தவர்கள் இன்று கொழும்பு கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தமது உறவுகளை கண்டுபிடிக்க புதிய அரசாங்கம் புதிய விசாரணைகளை ஆரம்பிக்கவேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.


இலங்கை அரசாங்கம் இந்தப்பணியை செய்யத்தவறினால் ஐக்கிய நாடுகள் சபை விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரினர்.

எமது பிள்ளைகளை தொலைத்து பல வருடங்கள் கழிந்துள்ளன.


இந்தநிலையில் எமக்கு உரிய பதில் வேண்டும் என்று மன்னாரில் இருந்து வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சார்ல்ஸ் என்பவர் குறிப்பிட்டார்.

எனது மகனை கொழும்பு சிறையில் கண்டதாக சிலர் கூறினர்.

எனவே அரசாங்கம் விரைவான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மட்டக்குளிய பிரதேசத்தில் இருந்து வந்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற சித்தி ஜெனீமா என்பவர் கோரிக்கை விடுத்தார்.




« PREV
NEXT »

No comments