Latest News

April 24, 2015

இந்த பேயை நான் வர வேண்டாம் என்று கூறினேன்.
by admin - 0

'இந்த பேயை நான் வர வேண்டாம் என்று கூறினேன். என்னை விட இவனுக்கு ஜோன் மீது நம்பிக்கை. பசில் பயமின்றி வருமாறு ஜோன்தான் கூறியுள்ளார். வாருங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று ராஜிதவும் கூறியுள்ளார். இந்த இருவரிடமும் ஏமாந்து நாட்டுக்கு வந்தது சிக்கிக் கொண்டது தெரிகிறது தானே. தேர்தலுக்கு முன் மஹிந்தவிற்கும் ஜம்பர் அணியப்படும் என்று ராஜித கூறுகிறார். நான் மனதை திடப்படுத்திக் கொண்டு உள்ளேன். எனக்கு சிறை நல்ல பழக்கம். நான் தாயின் இறுதிக் கிரியைக்கும் சிறையில் இருந்தே வந்தேன்.' என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பசில் ராஜபக்ஷ விளக்கமறியலில் வைக்கப்பட்ட செய்தியை அறிந்த பின் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.


 
தனது நண்பரிடம் மேலும் கூறிய மஹிந்த ' விமல், பந்துல இணைத்து அழகாக திட்டமிட்டு நடத்திய செயலை பசில் திண்றுவிட்டார். பசில் இந்தமாரி முட்டாள் வேலைதான் செய்வார். அவரது பாவம் தான் நான் இப்படி உள்ளேன். அதனால்தான் எனது மகன்மார் எவருக்கும் பசிலை கண்ணிலும் காட்டாது. நான் இல்லையென்றால் இரண்டு வருடங்களுக்கு முன் பசில் யோசித்தவிடம் சூடு வாங்கியிருப்பார். எனது நேரம் சரியில்லை என்று எனக்கு நன்கு தெரிகிறது' என்று மஹிந்த தெரிவித்துள்ளார்.

« PREV
NEXT »

No comments