Latest News

April 02, 2015

நுரைச்­சோலை விவ­சா­யிகள் அமைப்பு காணி உறுதி வழங்­கு­மாறு கோரிக்கை
by admin - 0

vivasaayi
 விவ­சா­யி
அம்­பாறை மாவட்­டத்தில் காணியை இழந்த முஸ்லிம் விவ­சா­யி­க­ளுக்கு வழங்­கப்­பட்ட பதில் காணி­க­ளுக்கு காணி உறுதி வழங்­கு­மாறு அக்­க­ரைப்­பற்று நுரைச்­சோலை விவ­சா­யிகள் அமைப்பு மகஜர் மூலம் கோரிக்கை விடுத்­துள்­ளது. இது­தொ­டர்­பான கடி­தங்கள் அமைப்பின் நிர்­வா­கி­களால், ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, பிர­தமர் ரணில் விக்­­ர­ம­சிங்க, பெருந்­தோட்ட கைத்­தொழில் அமைச்சர் லக்ஷ்மன் கிரி­யெல்ல, சுகா­தார இரா­ஜாங்க அமைச்சர் எம்.ரி.ஹசன் அலி, விவ­சாய நீர்ப்­பா­சன பிர­தி­ய­மைச்சர் அனோமா கமகே ஆகி­யோ­ருக்கு அனுப்­பி­வைக்­கப்­பட்­டுள்­ளது. அக்­க­டி­தத்தில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­வது, அக்­க­ரைப்­பற்று மக்கள் வர­லாற்றுக் காலம் தொடக்கம் விவ­சா­யத்தை ஜீவ­னோ­பாய தொழி­லாக மேற்­கொண்­டு­ வ­ரு­கின்­றனர்.

 குடும்­பங்­களைப் பாது­காக்க இம்­மக்கள் மிகவும் கஷ்­டப்­பட்­ட­வர்கள். 1932க்கு முன்­னரே நெற்­செய்கை விவ­சா­யத்தை பிர­தே­சத்தில் மேற்­கொண்­டு­வந்த மக்கள், சனத்தொகைப் ­ப­ரம்­ப­லுக்கு ஏற்ப நீத்தை, சிறு நீத்தை, மேலா­ம­ரத்­து­வெளி, அம்­பலம் ஓயா, நுரைச்­சோலை ஆகிய பிர­தே­சங்­களில் தொழிலை விஸ்­த­ரித்­தனர். இவ்­வா­றான நிலையில் 1965ஆம் ஆண்டு கரும்புச் செய்­கைக்­காக உரிய நடை­மு­றைகள் பின்­பற்­றப்­ப­டா­மலும், பதில் காணி மற்றும் நஷ்­ட­ஈடு என எது­வுமே வழங்­கப்­ப­டா­மலும் காணிகள் சுவீ­க­ரிக்­கப்­பட்­டன. இதனால் பாதிக்­கப்­பட்ட 576 விவ­சா­யிகள் நடுத்­தெ­ருவில் கைவி­டப்­பட்­டனர்.

அப்­போ­தைய அமைச்சர் எம்.எச்.முகம்­மது ஊடாக அமைச்சர் காமினி திஸா­நா­யக்­க­விடம் இவர்­க­ளது பிரச்­சி­னைகள் முன்­வைக்­கப்­பட்­டதன் விளை­வாக 1985.12.13 ஆம் திகதி பொரு­ளா­தார அபி­வி­ருத்திக் கூட்­டத்தில் பதில் காணி­யாக புதிய காணி வழங்க தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்­டது. இத்­தீர்­மா­னத்தின் பிர­காரம் அக்­க­ரைப்­பற்று நுரைச்­சோ­லையில் காணிகள் வழங்க சிபாரிசு செய்­யப்­பட்டு இடம்­பெற்ற காணிக் கச்­சே­ரியில் 277 விவ­சா­யிகள் பதில் காணி­களை பெற்­றுக்­கொண்­டனர்.

இவ்­வாறு பெறப்­பட்ட பதில் காணியில் 1989ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரை நெற் செய்கை பண்­ணப்­பட்டு வந்­தது. பின்னர் கரும்புச் செய்­கைக்கு கட்­டா­யப்­ப­டுத்­தப்­பட்­டுள்ளோம். குறித்த காணி­களின் தகு­தி­காலம் நிறை­வ­டைந்­ததும், எல்.டீ.ஓ. உத்­த­ரவுப் பத்­தி­ரமும், பின்னர் உறு­தியும் வழங்­கு­வ­தாக உறு­தி­ய­ளிக்­கப்­பட்­டது. ஆனால், எல்.டீ.ஓ. உத்­த­ரவுப் பத்­திரம் வழங்­கப்­பட்­டி­ருந்த போதிலும், உறுதிப் பத்­திரம் இன்னும் வழங்­கப்­ப­ட­வில்லை.

இவ்­வா­றான நிலையில் கரும்­புச்­செய்­கையின் மூலம் நாம் கஷ்­டத்­தையும், நஷ்­டத்­தையும் எதிர்­கொண்­டு­ வ­ரு­கின்றோம். கரும்புச் செய்­கையை வினைத்­திறன் மிக்­க­தாக மாற்­றி­ய­மைக்கும் போது 5000 ஹெக்­ட­யரில் பெறக்­கூ­டிய விளைச்­சலை 3000 ஹெக்­ட­யரில் பெறக் கூடி­ய­தா­யி­ருக்கும். மீதி 2000 ஹெக்­டயர் நிலத்தில் நெற்­செய்­கையை மேற்­கொண்டு நாட்டின் அரிசித் தட்­டுப்­பாட்டை நிவர்த்­திக்க முடியும். ‘நாட்­டுக்குத் தேவை­யான சீனியை நம் நாட்டில் உற்­பத்தி செய்வோம்’ எனும் கோஷத்தின் மூலம் எமது வாழ்வு சீர­ழிக்­கப்­பட்­டு­வ­ரு­கின்­றது. இதனைக் கருத்­திற்­கொண்டும், ஏழை விவ­சா­யி­களைப் பாது­காக்கும் பொருட்டும் ஆணைக்­கு­ழு­வொன்றை அமைத்து உண்மை நிலையைக் கண்டறிவதுடன், விவசாயிகள் சுயாதீனமாக விரும்பிய பயிர்ச் செய்கையை மேற்கொள்வதற்கும் ஆவன செய்ய வேண்டும். அத்துடன், இக்காணிகளுக்கான உறுதிகளை வழங்கி விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வைப் பெற்றுத் தருமாறு கேட்டுக் கொள்கின்றோம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
« PREV
NEXT »