சனசந்தடிமிக்க விற்பனை நிலையமொன்றின் மின்தூக்கியில் தனது பிள்ளைகள் மூவரின் முன்னிலையில் தனது மனைவியை சுமார் 15 தடவைகள் அடித்த கணவர் ஒருவருக்கு இரு வருட சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றமொன்று தீர்ப்பளித்த சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது.
மேற்கு லண்டனில் வெஸ்ட்பீல்ட் விற்பனை நிலையத்திலுள்ள மின்தூக்கியில் ஜேஸன் எட்வார்ட் (36 வயது) என்ற மேற்படி நபர் தனது மனைவியை அடிப்பது, அந்த மின்தூக்கியில் பொருத்தப்பட்டிருந்த 'சிசிரிவி' கண்காணிப்பு வீடியோ கருவியில் பதிவாகியுள்ளது.
அவரது இந்த நடவடிக்கையை மின்தூக்கியில் அவருடன் இருந்த 13 வயதுக்கு குறைந்த வயதுடைய அவரது பிள்ளைகள் அவதானித்துக் கொண்டிருந்துள்ளனர்.
மின்தூக்கியின் கதவு திறக்கப்பட்டதும் ஜேஸன் எட்வார்ட்டை அந்த நிலையத்திலிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தடுத்து நிறுத்தி விசாரிக்க முயற்சித்துள்ளனர்.
எனினும் அவர் பொலிஸார் வருவதற்கு முன் தனது குடும்பத்தினருடன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இந்நிலையில் தீவிர விசாரணைகளை மேற்கொண்ட அதிகாரிகள், ஜேஸன் எட்வார்ட்டை தேடிக் கண்டுபிடித்து கைது செய்துள்ளனர்.
இதனையடுத்து அவருக்கு இரு வருட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்க ப்பட்டுள்ளது.
மேற்கு லண்டனில் வெஸ்ட்பீல்ட் விற்பனை நிலையத்திலுள்ள மின்தூக்கியில் ஜேஸன் எட்வார்ட் (36 வயது) என்ற மேற்படி நபர் தனது மனைவியை அடிப்பது, அந்த மின்தூக்கியில் பொருத்தப்பட்டிருந்த 'சிசிரிவி' கண்காணிப்பு வீடியோ கருவியில் பதிவாகியுள்ளது.
அவரது இந்த நடவடிக்கையை மின்தூக்கியில் அவருடன் இருந்த 13 வயதுக்கு குறைந்த வயதுடைய அவரது பிள்ளைகள் அவதானித்துக் கொண்டிருந்துள்ளனர்.
மின்தூக்கியின் கதவு திறக்கப்பட்டதும் ஜேஸன் எட்வார்ட்டை அந்த நிலையத்திலிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தடுத்து நிறுத்தி விசாரிக்க முயற்சித்துள்ளனர்.
எனினும் அவர் பொலிஸார் வருவதற்கு முன் தனது குடும்பத்தினருடன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இந்நிலையில் தீவிர விசாரணைகளை மேற்கொண்ட அதிகாரிகள், ஜேஸன் எட்வார்ட்டை தேடிக் கண்டுபிடித்து கைது செய்துள்ளனர்.
இதனையடுத்து அவருக்கு இரு வருட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்க ப்பட்டுள்ளது.
Social Buttons