Latest News

April 09, 2015

அதி­யுயர் பாது­காப்பு என்ற பெயரில் மீண்டும் காணி­களை கப­ளீ­கரம் செய்­வது பேரி­ன­வா­தத்தின் திட்­ட­மிட்ட சதி இ.தொ.கா. வன்னி அமைப்­பாளர் எஸ். கோவிந்­தராஜ்
by admin - 0

தி­யுயர் பாது­காப்பு என்ற பெயரில் மீண்டும் காணி­களை கப­ளீ­கரம் செய்­வது பேரி­ன­வா­தத்தின் திட்­ட­மிட்ட சதி­யாகும் என இ.தொ.கா. வின் வன்னி மாவட்ட அமைப்­பாளர் எஸ்.கோவிந்­தராஜ் தெரி­வித்தார்.
vivasaayi

வவு­னியா, கணே­ச­பு­ரத்தில் இ.தொ.கா. வின் மக்கள் சந்­திப்பின்போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடாந்தும் தெரி­விக்­கையில்,

புதிய ஆட்சி அமைப்­ப­தற்குத் தீர்­மான சக்­தி­யாக இருந்த வட., ­கி­ழக்கு தமி­ழர்­களின் இப்­பி­ரச்­சினை விஸ்­வ­ரூ­ப­மெ­டுத்து கொழுந்­து­விட்டு எரி­கின்­ற­தற்கு சாத­கத்­தீர்­வினை பெற்­றுக்­கொ­டுப்­பது அரசின் கடமை என்­பதை பாரா­ளு­மன்­றத்தை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் சகல தமிழ் அமைச்­சர்கள், இரா­ஜாங்க அமைச்­சர்கள், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அர­சுக்கு அழுத்தம் கொடுப்­பது இம்­மக்­க­ளுக்கு செய்யும் சமூக வர­லாற்றுக் கட­மை­யாகும்.

இன்­றைய அரசு வலி­காமம் வடக்கில் 100 நாட்­களில் 1100 ஏக்கர் காணியை விடு­விப்­ப­தாக வாக்­கு­று­தி­ய­ளிக்­கப்­பட்டு இன்­றுடன் 80 நாட்­க­ளா­கின்­றது. ஆனால் சிறி­ய­ளவு காணி­களே விடு­விக்­கப்­பட்­டுள்­ளன.

 பெரும்­ப­குதி மிகுதி நாட்­களில் விடு­விக்­கப்­ப­டுமா என்­பது காணிக்கு உரி­மை­யான மக்கள் மத்­தியில் உள்ள விஸ்­வ­ரூ­ப­மான கேள்­வி­யாகும். தின­சரி நாளி­தழ்­களில் ஊர்­ஜி­தப்­ப­டுத்­து­கின்ற செய்­தி­களின் படி பெரும்­ப­கு­தி­யான பல ஏக்கர் காணிகள் தொடர்ந்து இரா­ணுவ வச­முள்­ள­தாக அறிய முடி­கின்­றது. எனவே ஆண்ட, ஆளும் அர­சுக்குள் மிக காத்­தி­ர­மா­கவும் நாசுக்­காகவும் வட., கி­ழக்கு தமி­ழர்­க­ளது சொந்தக் காணி­களை சுவீ­க­ரிப்­பதில் வெற்­றி­ கண்­டு­வரு­வது குறிப்­பி­டத்­தக்­கது ஆட்சி மாற்­றத்­தி­னூ­டாக தங்­களின் கஷ்­டங்கள், துன்ப துய­ரங்­க­ளுக்­குக்குத் தீர்வு கிட்டும் என்ற நம்­பிக்கை இன்று தமி­ழர்கள் மத்­தியில் நிர்­மூ­ல­மாக்­கப்­பட்­டுள்­ளது. அரசு தமிழ் மக்­க­ளது பிரச்­சி­னை­களை தீர்ப்­பதில் கையா­ளு­கின்ற விதமே இதற்கு கார­ண­மா­க­வுள்­ளது. தமிழர்களின் காணிகளை இராணுவத்திற்காக அரசு சுவீகரிப்பதன் தாற்பரியத்தை உணர்ந்து அரசு உறுதியளித்தவாறு இதற்கான தீர்வினை வழங்குமாறு வலியுறுத்துவது சகல தமிழ் அரசியல் தலைமைகளுக்கும் உள்ள தார்மீகக் கடமையாகும் என்றார்.
« PREV
NEXT »