தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் 'மேர்ச்சன்ட் வோட்' அறையில் விடுமுறை கழித்து வரும் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ரோஹன ராஜபக்ஷவை காப்பாற்றவென ராஜபக்ஷக்கள் வழமைபோன்று நீதிமன்றுக்கு அழுத்தம் கொடுக்கத் தொடங்கியுள்ளதாக தெரியவருகிறது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி லலித் ஜயசூரியவிற்கு ராஜபக்ஷ ஆதரவாளர்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருவதாகவும் மேல் நீதிமன்ற உள்ளதகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மஹிந்த ராஜபக்ஷவின் நெருங்கிய நட்பை கொண்டுள்ள நீதிபதி லலித் ஜயசூரிய ராஜபக்ஷ ஆதரவாளர்களின் அழுத்தத்தின் மத்தியில் பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றார்.
பசில் ராஜபக்ஷ மீது சுமத்தப்பட்டுள்ள பொது சொத்து மோசடி வழக்கில் பிணை வழங்க நீதவான் நீதிமன்றுக்கு முடியாது என்பதால் மேல் நீதிமன்றில் கோரிக்கை முன்வைக்கலாம். பசில் குறித்து கருணையுடன் லலித் ஜயசூரிய நீதிபதி செயற்படலாம் என்ற நம்பிக்கையில் அவர் முன்னிலையில் பிணை மனுவை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
No comments
Post a Comment