சிறிலங்கா அரசாங்கத்தின் வாய்ப்பேச்சுக்கள் செயல்வடிவம் பெற வேண்டும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் ஜனநாயகம், தொழில் மற்றும் மனித உரிமைகளுக்கான உதவி ராஜாங்க செயலாளர் ரொம் மலினொவ்ஸ்கி இதனைத் தெரிவித்துள்ளார்.
புதிய அரசாங்கம் பதவி ஏற்றதன் பின்னர் சர்வதேசத்துக்கு பல உறுதிமொழிகளை வழங்கியுள்ளது.
நல்லிணக்கம், மனத உரிமைகள் போன்ற விடயங்கள் குறித்த பல வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதாகவும் தெரிவித்துள்ளது.
ஆனால் இவற்றுக்கு செயல்வடிவம் கொடுக்கப்பட வேண்டும்.
அதுவே முக்கியமானது என்று அவர் கூறியுள்ளார்.
Social Buttons