இறுதிப்போரின்போது வன்னியில் கொல்லப்பட்டதாக நம்பப்படும் இடத்தில் அமெரிக்கா தமது இறுதி வணக்கத்தை செலுத்தியுள்ளது.
இலங்கையில் தமது விஜயத்தை முடித்துக் கொண்ட அமெரிக்காவின் ஜனநாயக, மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர் துறையின் உதவிச்செயலாளர் டொம் மலிநௌஸ்கி இதனை தெரிவித்துள்ளார்.
வன்னியில் இறுதிப்போர் இடம்பெற்ற இடத்துக்கு சென்றபோது தமது உணர்வுபூர்வமான நிலை ஏற்பட்டது.
இதனையடுத்து போரினால் இறந்த இரண்டு தரப்பினருக்கும் அங்கு இறுதிமரியாதை செலுத்தியதாக டொம் குறிப்பிட்டார்.
இதேவேளை முஸ்லிம்கள் தாக்கப்பட்ட அளுத்கமை நகருக்கு சென்ற அவர் அரசாங்கம், பொறுப்புக்கூறலை மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார்.
இந்தநிலையில் புதிய அரசாங்கம் அமெரிக்காவின் உதவியுடன் பல விடயங்களில் முன்னேற்றமான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இதற்கிடையில் போரின்போது காணாமல் போனோர் தொடர்பில் தாமதமின்றி பதில் வழங்கப்பட வேண்டும் என்றும் டொம் கோரிக்கை விடுத்தார்.
No comments
Post a Comment