Latest News

March 22, 2015

வெலே சுதா வழங்கும் தகவல்களை வெளியிட்டால் பல குட்டுக்கள் அம்பலம்
by admin - 0

vivasaayi
தடுப்புக் காவலில் வைக்­கப்­பட்­டுள்ள வெலே­சுதா தொடர்­பான தக­வல்களை வெ ளியிட்டால் எம்.பி. க்கள் உட்­பட பலம் பொருந்­திய நபர்­களின் பெயர்­க­ளையும் வெளி­யிட வேண்­டி­யி­ருக்கும். எனவே விசா­ர­ணைகள் முடியும் வரை அதனை நான் வெளி­யி­ட­வில்­லை­யென பொதுமக்கள் அனர்த்த முகா­மைத்­துவம் மற்றும் கிறிஸ்­தவ மத அலு­வல்கள் அமைச்சர் ஜோன் அம­ர­துங்க நேற்று வெள்­ளிக்­கி­ழமை சபையில் தெரி­வித்தார்.
பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வாய்­மூல விடைக்­கான கேள்வி நேரத்தில் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி எம்.பி. சாந்த பண்­டார எழுப்­பிய கேள்­விக்கு பதி­ல­ளிக்கும் போதே அமைச்சர் ஜோன் அம­ர­துங்க இவ்­வி­ட­யத்தை குறிப்­பிட்டார்.
வெலே­சுதா தொடர்­பான பைல்கள் (ஆவ­ணக்­கோ­வைகள் ) காணாமல் போய்­விட்­ட­தாக தகவல் வெளி­வந்­தி­ருப்­ப­தாக குறிப்­பிட்டு சாந்த பண்­டார எம்.பி. இதன்­போது கேள்வி எழுப்­பினார்.
இதற்கு பதி­ல­ளித்த அமைச்சர் ஜோன் அம­ர­துங்க,
பைல்கள் தொடர்­பாக மட்­டு­மல்ல இன்னும் வேறு தக­வல்கள் இருக்­கின்­றன. இவற்றை கூறு­வ­தென்றால் இங்­குள்ள சில உறுப்­பி­னர்கள் பற்­றிய தக­வல்­க­ளையும் வெளி­யிட வேண்­டி­யி­ருக்கும். எனினும் எம்.பி.க்களின் பெயர்­களை குறிப்­பிட முடி­யாது என்­பதால் நான் இந்த தக­வல்­களை வெளி­யி­டப்­போ­வ­தில்லை.
வெலே­சு­தா­விடம் எம்.பி. ஒருவர் 12 இலட்சம் கட­னுக்கு வாங்­கி­யுள்ளார். எம்பி ஒருவர் எதற்­காக பணம் வாங்­கினார் என்று தெரி­ய­வில்லை என்று கூறினார்.
இதே­வேளை இப்­ப­டி­யான விட­யங்­களை தெரி­வித்­துக்­கொண்­டி­ருக்­காது, சம்­பந்­தப்­பட்­ட­வர்­களை கைது செய்து உரிய நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு எதிர்க்­கட்சி தலைவர் நிமால் சிறி­பால டி சில்வா கூறினார்.
கடந்த ஆட்­சிக்­கா­லத்தில் போன்று எடுத்த எடுப்பில் அனை­வ­ரையும் கைது செய்து சிறையில் அடைக்­காமல் உரிய விதத்தில் விசா­ர­ணை­களை மேற்­கொண்டு போதிய சாட்­சி­யங்­க­ளுடன் கைது செய்­யப்­ப­டு­வார்கள் என்று அமைச்சர் ஜோன் அம­ர­துங்க கூறினார்.
அத்­துடன் விசா­ர­ணையின் இறு­தியில் பலம் பொருந்­திய நபர்­க­ளையும் கைது செய்ய வேண்­டி­யி­ருக்கும் என்­ப­தனை கவ­லை­யுடன் தெரி­விக்க வேண்­டி­யி­ருப்­ப­தா­கவும் ஜோன் அம­ர­துங்க கூறினார்.
இதே­வேளை அண்­மைக்­கா­லங்­களில் பல்­வேறு இடங்­க­ளிலும் மர்­ம­மான முறையில் கொலை செய்­யப்­பட்­ட­வர்­க­ளது சட­லங்கள் மீட்­கப்­பட்­டி­ருப்­பது தொடர்­பாக எடுக்­கப்­பட்­டி­ருக்கும் நட­வ­டிக்­கைகள் பற்றி சாந்த பண்­டார எழுப்­பிய கேள்­விக்கு பதி­ல­ளித்த அமைச்சர் ஜோன் அம­ர­துங்க, இந்த சம்­ப­வங்கள் தொடர்பில் விசா­ர­ணைகள் நடத்தப்படுகின்றன. இவை இடம்பெற்றிருக்கக்கூடிய விதம் பற்றி ஆராயப்படுகின்றன.
இச்சம்பவங்கள் தொடர்பாக விரிவான அறிக்கைகளையும் நான் பொலிஸ் மா அதிபரிடம் கோரியிருக்கின்றேன். அடுத்த வாரத்தினுள் அது கிடைக்கும் என்று நம்புகிறேன் என்றார்.
« PREV
NEXT »