Latest News

March 20, 2015

மகிந்த பிரதமர் வேட்பாளர்-பச்சைக்கொடி காட்டும் அமைச்சர்
by admin - 0

சுதந்திரக் கட்சியின் பிரதமர் வேட்பாளார் மஹிந்த என்றால் நான் அதற்கு உடன்படுகின்றேன் என அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். 

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதமர் வேட்பாளர் மஹிந்த ராஜபக்ச என்றால் அதற்கு தாம் உடன்படுவதாக அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ச என்னுடைய நல்ல நண்பாராவார், அவரை அவரது குடும்ப உறுப்பினர்களே சிதைத்தனர். தேர்தலின் பின்னரும் மஹிந்தவை சந்தித்தேன் சுமூகமாக பேசிக்கொண்டோம். 

அண்மையில் எனது மனைவியுடனும் அவர் தொலைபேசியில் பேசியிருந்தார். 

தனிப்பட்ட ரீதியில் மஹிந்தவுடன் எவ்வித முரண்பாடுகளும் கிடையாது.  கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் பிழையான தீர்மானங்களின் போது நான் அறத்கு எதிராக குரல் கொடுத்தேன். எனது பேச்சிற்கு மதிப்பளித்து சில தீர்மானங்களை மஹிந்த எடுத்தார். 

 

நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இவரின் இந்த அறிவிப்பு மகிந்தவை பிரதமர் வேட்பாளராக சுகந்திர கட்சி நிறுத்துவதை உறுதி செய்கிறது அதாவது மகிந்தவிற்கு இருக்கும் பேரினவாத ஆதரவு அவர் தனித்து நின்றாலும் அதிகளவான ஆசனங்களை பெறுவார் என்பது சுகந்திர கட்சியின் தலைமை உணர்துள்ளது அத்துடன் அவருக்கு  சுகந்திர கட்சியின் பல உறுப்பினர்களின் ஆதரவு உள்ளதாகவும் கூறப்படுகிறது இதனால் மகிந்தவை வேட்பாளராக நிறுத்த சுகந்திரகட்சி தீர்மானித்துள்ளது.சந்திரிக்கா இதற்கு உடன்படுவாரா? என்பதே தற்போதைய கேள்வி ஆனாலும் அமைச்சரின் இந்த அறிவிப்பு சந்திரிக்கா அம்மையாரின் அனுமதியுடனே நடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது 



« PREV
NEXT »

No comments